கொரோனா வைரஸ் காரணமாக பூமியில் குறைந்த அதிர்வுகள்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கால் முடங்கி வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இது மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் தடை ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொருளாதார நெருக்கடி நேரிட்டாலும் ,சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்துள்ளது.
பொது முடக்கம் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள ,மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதும் மற்றும் வாகனங்களில் பயணிப்பதும் குறைந்துள்ளது.இதன் விலைவாக உலகில் பொதுவாக எழும் அதிர்வுகளின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெல்ஜியன் ராயல் அப்சர்வேட்டரி தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உலகின் 300 வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை பார்க்கும் போது உலகில் எத்தனை தான் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே சென்றாலும், இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மனிதன் இயற்கையை அழித்துக்கொண்டே சென்றாலும்,எல்லாவற்றிகும் ஒரு முடிவு உண்டு,எல்லாவற்றிகும் ஒரு இறுதி கட்டம் உண்டு.அதன் பிறகு இயற்கை எல்லாவற்றையும் அழித்தால் இந்த உலகம் தாங்கும் ,ஆனால் உலகில் உள்ள மனிதர்கள் தாங்க மாட்டார்கள் என்பதற்கு கொரோனா வைரஸ் வரும் காலங்களில் ஒரு முக்கியமான உதாரணம் என்பது நிதர்சணமான உண்மை.
உதாரணம் மக்கள் ஊரடங்கால் வீட்டிளேயே முடங்கியுள்ள நிலையில்,புலி,சிங்கம், யானை போன்ற விலங்குகள் சுதந்திரமாக வெளியே நடமாடுவதை சமூக ஊடகங்களில் காணலாம்.